News Just In

4/11/2021 01:26:00 PM

அம்பாறையில் கால்வாய் ஒன்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!!


உருக்குலைந்த நிலையில் கால்வாய் ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி பகுதியில் இச்சடலம் இன்று(11) பொலிஸாரினால் பொதுமக்களின் தகவலின் பிரகாரம் மீட்கப்பட்டுள்ளது.

சுமார் 40 முதல் 45 வரையிலான வயது மதிக்கத்தக்க இச்சடலம் கொலை செய்யப்பட்டு போடப்பட்டதா அல்லது இயற்கை மரணமா என பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு தடயவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டு விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

No comments: