News Just In

4/11/2021 11:43:00 AM

மட்டக்களப்பு- வாழைச்சேனை ஏ எச் பாலர் பாடசாலையில் விழிப்பூட்டல் நிகழ்வு!!


(எச்.எம்.எம்.பர்ஸான்)
கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேசத்தில் இயங்கி வரும் ஏ எச் பாலர் பாடசாலையில் சுகாதார பழக்கவழக்கங்கள் தொடர்பான விழிப்பூட்டல் நிகழ்வு வெள்ளிக்கிழமை (9) இடம்பெற்றது.

பாடசாலையின் பொறுப்பாசிரியை எம்.எஸ்.எப்.சமீறா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வாழைச்சேனை மத்தி சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ரீ.எம்.நஜீப் கான், மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.எஸ்.நௌபர், பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.ஏ.நௌஷாத், பாடசாலை பற்சிகிச்சையாளர் எஸ்.சபாயா, குடும்ப நல உத்தியோகத்தர் திருமதி மாது ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் உணவுப் பழக்கவழக்கம் தொடர்பாகவும், நோய் தொற்றிலிருந்து பாதுகாப்புப் பெற கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டன.







No comments: