News Just In

7/16/2026 01:32:00 PM

களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் பணியாற்றி வந்த ஒருவர் மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழப்பு

களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் பணியாற்றி வந்த  ஒருவர் மோட்டார் சைக்கிள் விபத்தில்  உயிரிழப்பு


நூருல் ஹுதா உமர்

மருதமுனையில் பேருந்து - மோட்டார் சைக்கிள் விபத்து: ஒருவர் உயிரிழப்பு  அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை பிரதான வீதியில், பெட்ரோல் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இன்று இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார். கதிர்காமம் நோக்கிச் சென்று கொண்டிருந்த அரச பேருந்தொன்று, மோட்டார் சைக்கிளுடன் மோதியதில், மோட்டார் சைக்கிளைச் செலுத்திய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர் ஜெயராமன் ஜெகதீஸ்வரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் பணியாற்றி வந்ததுடன், கல்லடி இசை நடனக் கல்லூரி வீதியைச் சேர்ந்தவராகவும், தற்போது பாண்டியிருப்பில் திருமண உறவின் காரணமாக வசித்து வந்தவராகவும் ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்துக்கான காரணம் தொடர்பில் பெரியநீலாவணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments: