நாட்டைக் காக்க பயங்கரவாதிகளுடன் யுத்தம் செய்து உயிர்த்தியாகம் செய்த இராணுவ, பொலிஸ், சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை நினைவு கூர்ந்து அவர்களின் குடும்பத்தினரை கெளரவிக்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (11) இடம்பெற்றது.
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை ஏற்பாடு செய்த இந்நிகழ்வு பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.நெளபர் தலைமையில் பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் யுத்தத்தில் அங்கவீனமடைந்த படைவீரர்களும் கெளரவிக்கப்பட்டதோடு, அர்ப்பணிப்புடன் சேவையாற்றிவரும் இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகளும் இதில் கெளரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வுக்கு அதிதிகளாக 23 ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் நளின் கொஸ்வத்த, 231 ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் பிரதீப் கமகே, 232 ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரிகேனல் வசந்த ஹேவக்க, வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜீ.எஸ்.ஜயசுந்தர மற்றும் கட்டளை அதிகாரி லெப்டினன் கேனல் ஜெயசிங்க, வாழைச்சேன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன, இராணுவ அதிகாரி புகாரி ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
No comments: