News Just In

3/28/2026 06:32:00 AM

அமெரிக்க படைக்கு ட்ரம்பின் அதிரடி உத்தரவு.. வளைகுடாவில் உச்சகட்டத்தை எட்டும் பதற்றநிலை!

அமெரிக்க படைக்கு ட்ரம்பின் அதிரடி உத்தரவு.. வளைகுடாவில் உச்சகட்டத்தை எட்டும் பதற்றநிலை!


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுக்கு எதிரான "ஓபரேஷன் எபிக் ஃபியூரி" (Operation Epic Fury) திட்டத்தின் கீழ் தனது இராணுவத்திற்கு அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

இதனால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

இந்தத் தாக்குதலின் ஒரு பகுதியாக, கடந்த நான்கு வாரங்களில் மட்டும் அமெரிக்கா சுமார் 850 டோமாஹாக் (Tomahawk) ஏவுகணைகளை ஈரானின் முக்கிய இலக்குகளை நோக்கி ஏவியுள்ளது.

இந்த ஏவுகணைகள் 1,000 மைல் தொலைவில் உள்ள இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டவை என்றாலும், குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான ஏவுகணைகளைச் செலவழித்தது அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகனுக்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

No comments: