
மட்டக்களப்பு கல்லடிப் பாலத்திலிருந்து குதித்த நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இந்தநிலையில் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (26-03-2026) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் பாலத்திற்கு அருகாமையில் கடமையிலிருந்த போக்குவரத்து காவல்துறையினருக்கு இது தொடர்பில் பொதுமக்கள் தகவல் வழங்கியுள்ளனர்.
இதையடுத்து அப்பகுதியில் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த கடற்றொழிலாளர்களின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது பிற்பகல் ஒரு மணியளவில் குறித்த நபரின் சடலம் மீட்கப்பட்டதுடன் அவர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் கல்லடிப் பாலத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
No comments: