News Just In

9/01/2022 05:51:00 AM

இரவில் கைக்குழந்தையை வீதியில் விட்டுச் சென்ற நபர்... பொலிஸ் அதிகாரியின் நெகிழ்ச்சி செயல்!

பதுளையில் கைக்குழந்தையை அனாதை இல்லத்திற்கு அருகே கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பண்டாரவளை அம்பேகொட சிறிசங்கபோ சிறுவர் இல்லத்தின் வாகன தரிப்பிடத்தில் குறித்த குழந்தை கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் நிலையத்தில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் முன்வந்ததுடன், பின்னர் குழந்தையை தியத்தலாவை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சிறுவர் இல்லத்திற்கு அருகில் உள்ள சிசிரிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, ​​இரவில் ஆண் ஒருவர் வந்து குழந்தையை விட்டுச் செல்வது அவதானிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments: