News Just In

9/01/2022 05:44:00 AM

வாழைச்சேனை அந்நூர் மாணவன் அப்ஸர் மருத்துவ பீடத்திற்கு தெரிவாகி வரலாற்றுச் சாதனை!

வெளியான க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேற்றின்படி வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை மாணவன் ஏ.முகம்மத் அப்ஸர் மருத்துவ பீடத்திற்கு தெரிவாகியுள்ளதாக பாடசாலை அதிபர் ஏ.எம்.எம்.தாஹிர் தெரிவித்தார்.

இவர், 3 ஏ பெறுபேறுகளுடன் மாவட்டத்தில் 48 ஆம் இடத்தைப் பெற்று மருத்துவ பீடத்திற்கு தெரிவாகியுள்ளார்.

வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை வரலாற்றில் முதன்முறையாக மாணவன் அப்ஸர் மருத்துவ பீடத்திற்கு தெரிவாகி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளதாக அதிபர் மேலும் தெரிவித்தார்.

இவர், வாழைச்சேனை - 4 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த எம்.அலாப்தீன் - எம்.யூ. அவ்வா உம்மா தம்பதிகளின் புதல்வராவார்.

மருத்துவ பீடத்திற்கு தெரிவாகி வரலாற்றுச் சாதனை படைத்துள்ள மாணவன் அப்ஸருக்கு பாடசாலை அதிபர் ஏ.எம்.எம்.தாஹிர், கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழுவினர்கள், முக்கியஸ்தர்கள் எனப்பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

(எச்.எம்.எம்.பர்ஸான்)

No comments: