மட்டக்களப்பில் இடம்பெற்ற கொலைச் சம்பவங்கள் தொடர்பான வழக்கில், பிள்ளையான் பலத்த பாதுகாப்புடன் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
பிள்ளையான் உள்ளிட்ட சந்தேகநபர்களை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.வழமைக்கு மாறாக நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
பிள்ளையானுக்கு ஆதரவாக பெரும் திரளான மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முக்கிய ஆதரவாளர்கள் யாரும் வரவில்லை என்பது அங்கிருந்தவர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.
கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களான இருவர்நீதிமன்றத்திற்கு வராதது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
பிள்ளையானுக்கு எதிராக முன்னாள் ஆதரவாளர்கள் மற்றும் கட்சி முக்கியஸ்தர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாகக் கூறப்படுவது, வழக்கின் போக்கை மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments: