News Just In

11/20/2019 05:15:00 PM

பிரதமர் பதவியை இராஜினாமா செய்து அலரிமாளிகையிலிருந்து வெளியேறினார் ரணில் விக்ரமசிங்க!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமது பதவியை இராஜினாமா செய்தமைக்கான கடிதம் ஜனாதிபதிக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

தமது பதவி விலகல் தொடர்பில் பிரதமர் ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதுடன் தனது உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரிமாளிகையிலிருந்தும் வெளியேறியுள்ளார்.

பிரதமரின் பதவி விலகலை தொடர்ந்து இன்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ 15 பேர் கொண்ட ஒரு இடைக்கால அரசாங்கத்தை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவுடன் கலந்தாலோசித்து அமைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments: