News Just In

8/27/2026 09:05:00 AM

நேபாளத்தை புரட்டிப் போட்ட வெள்ளம்: ஈஷா சேர்ந்த 77 பேரைக் காணவில்லை - சத்குரு வெளியிட்ட பயங்கர காணொளி

நேபாளத்தை புரட்டிப் போட்ட வெள்ளம்: ஈஷா சேர்ந்த 77 பேரைக் காணவில்லை - சத்குரு வெளியிட்ட பயங்கர காணொளி



நேபாளத்தில் கிராமங்களைச் சூறையாடி, பாலங்களையும் வீடுகளையும் அடித்துச் சென்ற வெள்ளத்தில் இதுவரை 160 பேர் உயிரிழந்துள்ளதாக நேபாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லை என்றும் 157 உடல்கள் மீட்கப்பட்டதாகவும்இ அபாயகரமான பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் நேபாள காவல்துறை புதன்கிழமை இரவு தெரிவித்துள்ளது.

திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து சுமார் 403 சுற்றுலாப் பயணிகள் காணாமல் போனதாகவும் அவர்களில் 341 பேர் வெளிநாட்டினர் என்றும் நேபாள சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதேவெளை நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளப்பெருக்கில் சத்குருவின் ஈஷா அறக்கட்டளையைச் சேர்ந்த குறைந்தது 77 யாத்ரீகர்கள் காணாமல் போயுள்ளனர்.

திபெத்தில் உள்ள கைலாஷ் மானசரோவரில் இருந்து திரும்பி வரும் வழியில் அந்தக் குழுவினர் குடிவரவு அலுவலகத்தில் இருந்ததாக அவா் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.

அவா்களது நிலை குறித்து அதிகாரபூா்வ தகவல் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. இந்த யாத்திரையில் பங்கேற்ற 21 குழுக்களில் 495 போ் ஏற்கெனவே பாதுகாப்பாகத் திரும்பிவிட்டனா். தற்போது 743 போ் திபெத்திலும், 148 போ் நேபாளத்திலும் பாதுகாப்பாக உள்ளனா் என தெரிவித்துள்ளாா்.

அவர் வெளியிட்ட காணொளியில் திபெத்தின் கிரியோங் துறைமுகப் பகுதியில் சீறிப்பாயும் ஒரு பிரம்மாண்டமான அலை, குடிவரவு அலுவலகத்தின் மீது சரிந்து, பின்னர் ரசுவாவிற்குள் புகுந்து, போட் கோசி ஆற்றங்கரை நெடுகிலும் பேரழிவை ஏற்படுத்தியதைக் காட்டுகின்றன.

No comments: