News Just In

11/29/2019 01:22:00 PM

தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இராஜினாமா


தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய பதவி விலகும் தீர்மானத்தினை ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக சபாநாயகர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்துள்ளதுடன் சபாநாயகர் கரு ஜெயசூரியவிற்கும் தனது கடித்தை அனுப்பி வைத்துள்ளார்.

கடந்த காலங்களிலும் , அண்மையில் இடம்பெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலிலும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் பங்களிப்பு பாரியளவில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: