News Just In

11/29/2019 01:37:00 PM

ஜனாதிபதி கோத்தாபய சந்திப்பை தமிழில் ட்டுவிட் செய்தார் பிரதமர் மோடி


ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையிலான சந்திப்பு சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது.

இருவருக்கும் இடையிலான சந்திப்பு புதுடில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இடம்பெற்றுவருகின்றது.

இந்நிலையில் குறித்த சந்திப்புக் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தமிழில் குறிப்பிட்டுள்ளதாவது,

“இலங்கை ஜனாதிபதியாக முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வருகைதந்த கோத்தாபய ராஜபக்ஷவை வரவேற்பதில் மகிழ்வடைகின்றேன். இலங்கை- இந்தியா வரலாற்று சிறப்புமிக்க உறவுகளுக்கு இந்த விஜயம் ஒரு சாற்றாகும் அதேநேரம் எமது பிணைப்பை வலுப்படுத்தும் நல்லுறவை பலமூட்டவும் உதவும் என அவரது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

No comments: