News Just In

11/21/2019 07:00:00 AM

ரோல் போல் உலகக் கிண்ணப் போட்டியின் கால் இறுதியில் இலங்கை அணி

5ஆவது ரோல் போல் (Roll Ball) உலகக் கிண்ண ஆண்­க­ளுக்­கான தனது கடைசி லீக் போட்­டியில் பிரான்ஸ் அணியை நேற்று வெற்­றி­கொண்ட இலங்கை அணி கால் இறுதிப் போட்­டியில் விளை­யாட தகுதி பெற்­றது.

பங்­க­ளா­தேஷில் 2017இல் நடை­பெற்ற 4ஆவது ரோல் போல் உலகக் கிண்ணப் போட்­டியில் 10 ஆவது இடத்தை பெற்ற இலங்கை அணி இம்­முறை கால் இறு­தி­க்கு முன்னேறியுள்ளது.

D குழு­வுக்­கான போட்­டியில் வெற்­றி­யீட்­டினால் மாத்­தி­ரமே கால் இறு­திக்கு முன்­னே­ற­மு­டியும் என்ற நிலையில் பிரான்ஸை எதிர்­கொண்ட இலங்கை 7–0 என்ற கோல்கள் கணக்கில் மிக இல­கு­வாக வெற்­றி­கொண்டு கால் இறு­திக்கு முன்­னே­றி­யது.

பங்­க­ளா­தே­ஷுக்கு எதி­ராக நேற்­று­முன்­தினம் இரவு நடை­பெற்ற போட்­டியில் 0–2 என்ற கோல்கள் அடிப்­ப­டையில் இலங்கை தோல்­வியைத் தழு­வி­யி­ருந்­தது.

D குழு­வுக்­கான லீக் சுற்றில் 4 போட்­டி­களில் இரண்டு வெற்­றிகள், ஒரு தோல்வி, ஒரு வெற்­றி­தோல்­வி­யற்ற முடிவுக­ளுடன் இரண்­டா­வது இடத்தை இலங்கை பெற்­றது. பங்­க­ளாதேஷ் முதலாம் இடத்தைப் பெற்­றது.

இந்­தி­யாவின் சென்­னை­யி­லுள்ள ஐ.சி.எப். உள்­ளக விளை­யாட்­ட­ரங்கில் குறித்த போட்டிகள் இடம்பெற்று வருகின்றன. இன்று நடை­பெ­ற­வுள்ள கால் இறு­தியில் ஆர்­ஜன்­டீ­னாவை இலங்கை எதிர்த்­தா­ட­வுள்­ளது.

No comments: