News Just In

11/19/2019 07:55:00 AM

எந்தவொரு தேர்தலுக்கும் நாம் தயார் – தேர்தல்கள் ஆணைக்குழு

எந்தவொரு தேர்தலுக்கும் தயாராகவுள்ளதாக தெரிவித்துள்ள தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு முடிவடைந்த தேர்தலுக்கான கொடுப்பனவுகளை, அந்தந்த தேர்தல் அலுவலர் ஊடாக வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் தேவை கருதி தமது ஆணைக்குழு பொதுத் தேர்தலுக்கோ அல்லது மாகாண சபை தேர்தலுக்கோ எந்த சந்தர்ப்பத்திலும் தயாராகவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான அதிகாரிகள் குழுவும் பெயரிடப்பட்டு, அதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

No comments: