"'உச்ச தலைவர்'' என்று அழைக்கப்படுபவர் எங்கே மறைந்திருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார்
அவர் ஒரு எளிதான இலக்கு, ஆனால் அங்கு அவர் பாதுகாப்பாக இருக்கிறார் - நாங்கள் அவரை கொல்லப் போவதில்லை, குறைந்தபட்சம் இப்போதைக்கு எங்கள் இலக்கு அவர் அல்ல என்றும் கூறியுள்ளார்.
அத்துடன் ஈரானை நிபந்தனையின்றி சரணடையுங்கள் என்று டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிலையில், அமெரிக்கா புதிய F-35 போர் விமானங்களுக்கான முன்பதிவை பாதியாகக் குறைத்துள்ளதாகத் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
திங்களன்று மேற்கு ஈரானின் தப்ரிஸ் அருகே நான்காவது F-35 ஜெட் சுட்டு வீழ்த்தப்பட்டு விமானி கைது செய்யப்பட்டதாக ஈரானின் அரசு செய்தி நிறுவனமான IRNA தெரிவித்தது.
இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் இந்த கூற்றை மறுத்தாலும், வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த ஆயுதத் திட்டமான F-35 இலிருந்து அமெரிக்கா பின்வாங்கும் முடிவை எடுத்துள்ளது.
F-35 விமானத்தின் பயணத் திறன் 2025 ஆம் ஆண்டளவில் 51.5 சதவீதமாகக் குறைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பாகங்களைப் பெறுவதில் உள்ள சிரமம், சிக்கலான பராமரிப்பு மற்றும் அதிக விலை ஆகியவை இந்த விமானத்தின் முக்கிய குறைபாடுகளாகக் கூறப்படுகின்றன.
No comments: