
அகமதாபாத்தில் ஜூன் 12 அன்று நடந்த ஏர் இந்தியா விமான விபத்து நடந்த பகுதியில் இருந்து, மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட நபர் ரூ 80,000 பணம் மற்றும் சுமார் 800 கிராம் தங்கம் உள்ளிட்ட பொருட்களை மீட்டுள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஏர் இந்தியா விமான விபத்து நடந்ததும் துரித அவசர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. உள்ளூர்வாசிகள் மொத்தம் அப்பகுதியில் குவிந்து மீட்பு நடவடிக்கைகளில் உதவியுள்ளனர்.
அதில் முதல் முதலாக சம்பவயிடத்திற்கு விரைந்தவர்களில் 56 வயதான ராஜு படேலும் ஒருவர். கட்டுமான நிறுவனம் ஒன்றை முன்னெடுத்துவரும் இவர் தமது குழுவினருடன் விபத்து நடந்த 5 நிமிடங்களில் சம்பவயிடத்திற்கு விரைந்துள்ளார்.
பிஜே மருத்துவக் கல்லூரியின் உணவகத்தின் மீது விமானம் விழுந்து நொறுங்கியபோது மாணவர்கள் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். முதல் 15 முதல் 20 நிமிடங்கள், எங்களால் அருகில் கூட செல்ல முடியவில்லை. தீ மிகவும் தீவிரமாக இருந்தது என ராஜு படேல் குறிப்பிட்டிருந்தார்.
சம்பவயிடத்திற்கு அவசர சேவைகள் வந்தவுடன், அவரது குழுவும் உதவத் தொடங்கியது, ஸ்ட்ரெச்சர்கள் இல்லாத நிலையில் காயமடைந்தவர்களை சுமந்து செல்ல சேலைகள் மற்றும் படுக்கை விரிப்புகளைப் பயன்படுத்தியுள்ளனர்.
மட்டுமின்றி ராஜு படேல் மற்றும் அவரது குழுவினர் இரவு 9 மணி வரை சம்பவ இடத்திலேயே இருக்க அனுமதிக்கப்பட்டனர். இடிபாடுகளுக்கு மத்தியில், எரிந்த சாமான்கள் தீக்கிரையான தரையில் சிதறிக் கிடப்பதை படேல் கண்டார், அதே நேரத்தில் அவரது குழுவினர் உடமைகளைத் தேடும் முயற்சிகளில் ஈடுபட்டனர்.
இந்த நிலையிலேயே அவர்கள் சுமார் 800 கிராமிற்கும் அதிகமான தங்க நகைகள், ரூ 80,000 பணம், கடவுச்சீட்டு உள்ளிட்டவைகளை மீட்டுள்ளனர். மீட்டப் பொருட்கள் அனைத்தும் ராஜு படேல் குழுவினர் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

242 பயணிகள் மற்றும் ஊழியர்களுடன் லண்டன் கேட்விக் விமான நிலையத்தை நோக்கி பயணப்பட்ட போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் வியாழக்கிழமை புறப்பட்ட சில நொடிகளில் கட்டுப்பாட்டை இழக்கத் தொடங்கியது.
இந்த துயர சம்பவம் கடந்த பத்தாண்டுகளில் உலகின் மிக மோசமான விமானப் பேரழிவுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. சம்பவயிடத்தில் இருந்து மொத்தம் 270 சடலங்கள் மீடகப்பட்டுள்ளதை பிஜே மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.
விமானத்தில் இருந்த 242 பயணிகள் மற்றும் ஊழியர்களில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்தார், எஞ்சியவர்கள் விபத்தில் கொல்லப்பட்டனர்.
No comments: