மட்டக்குளி - ராஸ்ஸமூனகந்த பகுதியில் இடம்பெற்ற கோர வாகன விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளதாக கொழும்பு தேசிய மருத்துவமனை தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
மேலும், இந்த விபத்தில் காயமடைந்த 12 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிற்றூந்து ஒன்றின் தடுப்புத் தொகுதி செயலிழந்ததால் கட்டுப்பாட்டை இழந்து, முச்சக்கரவண்டி மற்றும் உந்துருளி உள்ளிட்ட பல வாகனங்கள் மீது மோதி இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு, மட்டக்குளி - ராஸ்ஸ மூனகந்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அத்துடன், 5 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டை இழந்த சிற்றூந்தொன்று முச்சக்கரவண்டியொன்றையும் உந்துருளியொன்றையும் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
No comments: