News Just In

8/15/2026 02:12:00 PM

இலங்கையில் வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர் அவதானம்..! விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

இலங்கையில் வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர் அவதானம்..! விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை



வங்கி அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என நாடகமாடி இணையவழி ஊடாக பொதுமக்களை அச்சுறுத்தி பணமோசடியில் ஈடுபடும் குழுவினர் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு இலங்கை கணினி அவசர பதிலளிப்பு குழு எச்சரித்துள்ளது.

பொலிஸ் உத்தியோகத்தர்கள் அல்லது வங்கி அதிகாரிகள் என தெரிவிக்கும் நபர்களிடம் தனிப்பட்ட தகவல்களை வழங்க வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.


இதேவேளை, சந்தேகத்திற்குரிய அழைப்புகள் வந்தால் உடனடியாக தொலைபேசி இலக்கங்கள் ஊடாகப் பொலிஸ் நிலையம் அல்லது வங்கியை நேரடியாக தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.





குறுஞ்செய்திகள் மற்றும் இணையவழி ஊடாகத் திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மோசடிக்காரர்கள் பிரபல வங்கிகளின் பெயர்களைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்குப் போலி குறுஞ்செய்திகளை அனுப்பி மோசடியில் ஈடுபடுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர் அவதானம்

இவர்கள் வங்கி கணக்குகளில் வைப்பில் உள்ள பண விபரங்களை அறிந்து பணம் மோசடியான முறையில் ஈட்டப்பட்டதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவித்து அச்சுறுத்தி மோசடியில் ஈடுபடுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.



மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கடிதத்தலைப்புகள், அதிகாரிகளின் போலி கையொப்பங்கள் மற்றும் உத்தியோகபூர்வ முத்திரைகள் இடப்பட்ட போலி ஆவணங்களை அனுப்பி பொதுமக்களை நம்பவைக்கின்றமை தெரியவந்துள்ளது.

இவர்களிடம் பொலிஸ் சீருடைகள், வங்கி அடையாள அட்டைகள் மற்றும் போலி முத்திரைகளும் காணப்படுவதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை, ஓய்வூதியதாரர்கள் மற்றும் முதியோர்கள் மோசடி காரர்களால் இலக்குவைக்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

எனவே பொலிஸ் உத்தியோகத்தர்கள் அல்லது வங்கி அதிகாரிகள் என தெரிவிக்கும் நபர்களிடம் தனிப்பட்ட தகவல்களை வழங்க வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

No comments: