News Just In

8/15/2026 04:10:00 PM

வெளிநாட்டிலிருந்து வந்த உத்தரவில் சேகரிக்கப்பட்ட சிறை அதிகாரிகளின் தகவல்கள்! கசிந்த இரகசிய குரல் பதிவுகள்

வெளிநாட்டிலிருந்து வந்த உத்தரவில் சேகரிக்கப்பட்ட சிறை அதிகாரிகளின் தகவல்கள்! கசிந்த இரகசிய குரல் பதிவுகள்



சிறைச்சாலை அதிகாரிகளை பற்றிய தகவல்களை இரகசியமாக சேகரித்து வந்ததாக கூறப்படும் நபர் ஒருவரை சஹஸ்புர பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அண்மையில் புதிய மெகசின் சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலின் போது உயிரிழந்த முகமட் அஸ்மான் ஷெரிப்டீன் என்பவரின் நெருங்கிய சகா ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு தெஹிவளை, வட்டரப்பல வீதியில் இடம்பெற்ற இரட்டைப் படுகொலைச் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் அஸ்மானின் மோட்டார் சைக்கிள் சாரதியாகவும் இவர் செயற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அத்துடன், புதிய மெகசின் சிறைச்சாலை மோதலுக்கு மூன்று நாட்களுக்கு முன்னரே இவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார் என பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபரின் கைப்பேசியைப் பொலிஸார் பரிசோதித்தபோது, வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் "கொஸ் மல்லி" என்ற பாதாள உலகக் குழுத் தலைவருடன் அவர் பேசிய பல குரல் பதிவுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த உரையாடல்களில், சிறைச்சாலை அதிகாரிகளைப் பற்றிச் சேகரிக்கப்பட்ட விபரங்களும், அவர்களுக்குத் தீங்கு விளைவிப்பதற்கான ஆயத்தங்கள் குறித்த தகவல்களும் அடங்கியுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து சஹஸ்புர பொலிஸார் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments: