2026 ஆகஸ்ட் 31 ஆம் திகதி திங்கட்கிழமை போராட்டங்களை நடத்த அரச மற்றும் மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் தீர்மானித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) ஆகியவை வெளியிட்ட அண்மைய அறிக்கைகளில், குறைந்த வேதனம்; வழங்கும் 130 நாடுகளில் இலங்கை 120-வது இடத்தில் இருப்பது தெரியவந்துள்ளதை அடுத்தே இந்த போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, ஆகஸ்ட் 31 ஆம் திகதி நாடு முழுவதும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என அரச மற்றும் மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் இணைச் செயலாளர் தம்மிக முனசிங்க தெரிவித்துள்ளார்.
அதிகரித்துள்ள எரிபொருள் விலைக்கு ஏற்ப வேதன உயர்வு வழங்கப்பட வேண்டும் என்பதே அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் முதன்மையான கோரிக்கையாகும்.
இந்த ஆண்டில் ஆறு முறை எரிபொருள் விலை உயர்த்தப்பட்டதால் அரசு ஊழியர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தங்களது கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கடந்த ஜூன் மாதம் நாடாளுமன்றத்தில் உறுதியளித்தது.
ஆனால், ஆகஸ்ட் மாதம் முடிந்தபோதிலும் எந்தவொரு பத்திரமும் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவில்லை" எனக் கூறிய முனசிங்க, அந்த அமைச்சரவைப் பத்திரத்தை மறைக்காமல் அரசாங்கம் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) ஆகியவை வெளியிட்ட அண்மைய அறிக்கைகளில், குறைந்த வேதனம்; வழங்கும் 130 நாடுகளில் இலங்கை 120-வது இடத்தில் இருப்பது தெரியவந்துள்ளதை அடுத்தே இந்த போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, ஆகஸ்ட் 31 ஆம் திகதி நாடு முழுவதும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என அரச மற்றும் மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் இணைச் செயலாளர் தம்மிக முனசிங்க தெரிவித்துள்ளார்.
அதிகரித்துள்ள எரிபொருள் விலைக்கு ஏற்ப வேதன உயர்வு வழங்கப்பட வேண்டும் என்பதே அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் முதன்மையான கோரிக்கையாகும்.
இந்த ஆண்டில் ஆறு முறை எரிபொருள் விலை உயர்த்தப்பட்டதால் அரசு ஊழியர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தங்களது கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கடந்த ஜூன் மாதம் நாடாளுமன்றத்தில் உறுதியளித்தது.
ஆனால், ஆகஸ்ட் மாதம் முடிந்தபோதிலும் எந்தவொரு பத்திரமும் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவில்லை" எனக் கூறிய முனசிங்க, அந்த அமைச்சரவைப் பத்திரத்தை மறைக்காமல் அரசாங்கம் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
No comments: