News Just In

7/05/2026 01:12:00 PM

சுற்றாடல் வினாடி வினா போட்டி: தேசிய மட்டத்திற்கு நிந்தவூர் அல்-மஸ்ஹர் பெண்கள் பாடசாலை மாணவி தெரிவு

சுற்றாடல் வினாடி வினா போட்டி: தேசிய மட்டத்திற்கு நிந்தவூர் அல்-மஸ்ஹர் பெண்கள் பாடசாலை மாணவி தெரிவு


நூருல் ஹுதா உமர்

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மத்திய சுற்றாடல் அதிகார சபை மற்றும் CIPM ஆகியன இணைந்து கடந்த 04 ஆம் திகதி மட்டக்களப்பில் நடத்திய சுற்றாடல் வினாடி வினா போட்டியில், அம்பாறை மாவட்ட அணியைப் பிரதிநிதித்துவப்படுத்திய நிந்தவூர் கமு/கமு/அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையின் மாணவி சக்கி அஹமட் ஸீனத் அலீனா மாகாண மட்டப் போட்டியில் வெற்றி பெற்று தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளார்.

குறித்த மாணவி அண்மையில் வெளியிடப்பட்ட 2025 (2026) க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் 9A சித்திகளைப் பெற்று கல்வித்துறையிலும் சிறப்பான சாதனையைப் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. தேசிய மட்டத்திற்குத் தெரிவாகி பாடசாலைக்கும் அம்பாறை மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ள மாணவிக்கு பாடசாலை சமூகம் தனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளது.

அத்துடன், மாணவிக்கு வழிகாட்டல் மற்றும் ஆலோசனைகளை வழங்கிய பாடசாலை அதிபர் ஏ.சி. ஹமீது, அம்பாறை மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபை இணைப்பாளர் கே. குரைஷியா, சுற்றாடல் கழகப் பொறுப்பான உதவி அதிபர் எம்.ரீ. பெனாசிரா , பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், சுற்றாடல் கழக ஜனாதிபதி பதக்கப் பொறுப்பாசிரியை ஏ.எப். ருஸ்மா, சுற்றாடல் கழக ஆசிரியர்கள், மாணவியின் பெற்றோர் மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து ஆளணியினருக்கும் பாடசாலை சமூகத்தினர் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்.

No comments: