மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் அதி சொகுசு பேருந்தும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் வெலிக்கந்தை பகுதியில் இன்று (12) அதிகாலை நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிக்கந்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
வெலிக்கந்தையில் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து; ஒருவர் உயிரிழப்பு
No comments: