நூருல் ஹுதா உமர்
சாய்ந்தமருது பிரதேசத்தில் வினைத்திறனான அதிபராக பெயர் பெற்ற எனது குடும்ப உறவினரான யூ.எல். நஸார் அவர்கள் இன்று தனது அரச பணியிலிருந்து ஓய்வு பெருகிறார். அவர் மாணவர்களின் மீதும், தான் கடமையாற்றும் பாடசாலைகளின் மீதும் அதீத பற்றுகொண்டவராக தனது சேவை காலத்தில் இருந்து வந்தார் என என ஐக்கிய மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஏ.சி. யஹியாகான் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும்,
அதனால் என்னை போன்றவர்கள் பலரிடமும் பல்வேறுவகையான உதவிகளை பெற்று மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்கு உந்து சக்தியாக விளங்கினார். நான் அவரிடம் எவ்வகையான உதவிகளை கேட்டாலும் இல்லையென்று சொல்லாமல் தாராள மனம் கொண்டு உதவக்கூடியவர்.
அவர் கல்விப்பணியை தாண்டி நிறைய ஏழைகளுக்கு உதவிகள் வழங்கிய ஒரு சமூக சேவகராகவும் இருந்து வருகிறார். அவர் அதிபராக கடமையாற்றிய காலங்களில் சாய்ந்தமருது ஜீ.எம்.எம். எஸ், அல்- ஹிலால் போன்ற பாடசாலைகள் மேம்பட்டுள்ளதை நாம் காணலாம். கல்விக்காகவும், சமூக நலனுக்காவும் உழைத்த எனது குடும்ப உறவினரான யூ.எல். நஸார் அவர்களின் ஓய்வு காலம் மகிழ்ச்சியாக கழியவும், நிம்மதியாக, நிறைவான ஆரோக்கியத்துடன் வாழவும் பிராத்திக்கிறேன்.
No comments: