News Just In

6/07/2025 10:00:00 AM

சாய்ந்தமருது, மாளிகைக்காடு பிரதேசங்களில் நடைபெற்ற ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

சாய்ந்தமருது, மாளிகைக்காடு பிரதேசங்களில் நடைபெற்ற ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை


நூருல் ஹுதா உமர், நிப்ராஸ் லத்தீப்

மாளிகைக்காடு அந் நூர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை வழமை போன்று இம்முறையும் பள்ளிவாசலில் நடைபெற்றது. குத்பா உரையையும், பெருநாள் தொழுகையையும் பள்ளிவாசல் பேஸ் இமாம் அஷ் ஷெய்க் ஏ.எல்.எம் மின்ஹாஜ் (உஸ்மானி) நிகழ்த்தினார். மேலும் ஒவ்வொரு வருடமும் சாய்ந்தமருது ஜாமியுல் இஸ்லாஹ் ஜும்மா பள்ளிவாசலின் ஏற்பாட்டில் இடம் பெறும் திடல் தொழுகை இம்முறையும் சாய்ந்தமருது அஸ்ரப் ஐக்கிய பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இத் தொழுகையையும், குத்பா பிரசங்கத்தையும் அஷ்ஷெய்க் மௌலவி அபூபக்கர் கலீலுர் ரஹ்மான் (ஸலபி) அவர்கள் நிகழ்த்தி வைத்தார்.



No comments: