News Just In

6/07/2025 09:58:00 AM

மீண்டும் தலைதூக்கும் சட்டவிரோத மீன்பிடி..! மீன்பிடி துறைமுகங்கள் உருவாக்கப்படவேண்டும்..!இரா சாணக்கியன்

மீண்டும் தலைதூக்கும் சட்டவிரோத மீன்பிடி..! மீன்பிடி துறைமுகங்கள் உருவாக்கப்படவேண்டும்..!இரா  சாணக்கியன் 


மீண்டும் தலைதூக்கும் சட்டவிரோத மீன்பிடி. மீன்பிடி துறைமுகங்கள் உருவாக்கப்படவேண்டும்..! நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் ஒத்திவைக்கும் பிரேரணையின் போது 06.06.2025. மீன்பிடித் துறை அமைச்சருக்கும், பாதுகாப்பு அமைச்சர்களுடைய கவனத்திற்கும் 2022ம் ஆண்டு காலப்பகுதியில் மாளிகைக்காடு பிரதேசத்திற்கு என்னை அழைத்து அப் பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர்கள் இதே பிரச்சனையை முன்வைத்த வேளையில் 2022ம் ஆண்டு 9வது பாராளுமன்றத்தில் இப் பிரச்சனையை முன்வைத்திருந்தேன். அவ் வேளையில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த சரத் வீரசேகர அவர்கள் விசேட குழுவொன்றினை அமைத்து அவர்களைக் கைது செய்வதற்குரிய நடவடிக்கையை முன்னெடுப்பதாக அறிவித்திருந்தார். இங்கு முன்வைக்கப்பட்ட பிரேரணையிலே சிறு திருத்தம் “இக் குழுவை சேர்ந்தவர்கள் களுவாஞ்சிக்குடி கிராமத்தை சேர்ந்தவர்கள் அல்ல மாறாக களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகப் பிரிவை சேர்ந்தவர்களாவர்”.

இங்கு முக்கிய பிரச்சனையாக காணப்பட்டது Fisheries Inspector “தன்னால் தரையில் வைத்து இவர்களைப் கைது செய்ய முடியாது” எனவும் பொலிஸ் “எங்களால் கடலுக்குள் சென்று களவெடுப்பவர்களைப் கைது செய்ய முடியாது” எனவும் கூறுகின்றனர். ஆகவே கடல்படையையும் இணைத்து ஒரு வேலைத்திட்டத்தை முன்னெடுக்க முயற்சித்தோம். மீன்களை சூறையாடுதல் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயம். இதனை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். தேர்தல் காலப்பகுதியிலே எங்களுக்கிடையே பல்வேறு வாக்குவாதங்கள் இருந்தாலும் கூட மக்கள் சார்பிலே தேர்வு செய்யப்பட்டு; மக்களது பிரச்சனைகளைத் தீர்க்க உங்களுடன் இணைந்து செயற்பட நாமும் விரும்புகின்றோம். மட்டக்களப்பிலே பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. வடக்கு கிழக்கினைப் பொறுத்தவரையில் 2/3 கரையோரப் பிரதேசம் காணப்பட்டாலும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே துறைமுகங்கள் உள்ளன. சில நாட்களுக்கு முன் உலக வங்கி பிரதிநிதிகளுடன் நான் தொலைபேசி அழைப்பினை மேற்கொண்ட போது துறைமுகங்களை அமைப்பதற்குரிய முன்மொழிவுகள் வருவதாக கூறினர். அவர்களது ஒதுக்கீடுகளில் மீன்பிடி துறையை வளர்க்கவும் இடமுண்டு. எமது பிரதேசங்களில் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்ப உலக வங்கியின் நிதியினைப் பயன்படுத்த முயற்சிக்க வேண்டும். மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாம் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர், பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவர் ஆகியோருடன் இணைந்து ஒத்துழைப்பினை வழங்க தயாராக இருக்கின்றோம். மீன்களை சூறையாடுபவர்கள் யார் என்பதை நாமும் அறிவோம்.

No comments: