போதுமான வளங்களுடன், இடங்களுமுண்டு; மாகாண ஆணையாளர் வைத்தியர் நபில் தெரிவிப்பு
(அபு அலா)
அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் மூலிகைத் தோட்டங்களை அமைப்பதற்குரிய ஆரம்பக்கட்டப் பணிகளை கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களம் முன்னெடுத்து வருவதாக கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்தியர் எம்.ஏ.நபில் தெரிவித்தார்.
இலங்கையில் ஆயுர்வேத மருந்துகளை உற்பத்தி செய்வதற்குரிய அதிகமான மூலிகைகள் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன. இதற்காக செலவிடப்படும் செலவீனங்களை குறைத்து உள்நாட்டில் தொழில் வாய்ப்பினை ஊக்குவித்து பாரிய திட்டமிடல்களுடன் ஆயுர்வேத மருந்துகளை உள்நாட்டிலே உற்பத்தி செய்வதற்கு சுதேச மருத்துவத் திணைக்களம் தீர்மானித்து, நாடு தழுவிய ரீதியில் சமூக மூலிகைத் தோட்டங்களை நிறுவுவதற்குரிய வேலைத்திட்டமொன்றினை முன்னெடுத்துள்ளது.
அதற்கமைவாக, கிழக்கு மாகாணத்தில் குறித்த திட்டத்தினை செயற்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் கடந்த (28) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்தியர் எம்.ஏ.நபீல் தலைமையில் இடம்பெற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியா, நைஜீரியா, ஈரான், அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து பெரும்பாலான மூலிகைகளைப் பெற்றே எமது நாட்டில் மருந்துகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதற்காக பெருமளவிலான நிதிகளை எமது அரசாங்கம் செலவிட்டும் வருகின்றது. இத்திட்டத்தினை எமது மாகாணத்திலும் செயற்படுத்தினால் இந்த செலவினங்களை குறைத்துக்கொள்ள முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எமது மாகாணத்தில் இத்திட்டத்தை செயற்படுத்துவதற்கு போதுமான வளங்களும், மிகப் பொருத்தமான இடங்களும் இருக்கின்றது.
அதற்கான முன்னெடுப்புக்களை சிறந்த முறையில் செயற்படுத்த, சிறு பண்னையாளர்கள் மற்றும் தோட்ட செய்கையாளர்களையும் ஊக்குவித்து, மருந்து உற்பத்தி செய்வதற்கான மூலிகைப் பொருட்களை அவர்களிடமிருந்து பெற்றுகொள்ள முடியும் என்றார்.
இக்கலந்துரையாடலில், கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள உயரதிகாரிகள், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஆயுர்வேத வைத்தியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியா, நைஜீரியா, ஈரான், அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து பெரும்பாலான மூலிகைகளைப் பெற்றே எமது நாட்டில் மருந்துகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதற்காக பெருமளவிலான நிதிகளை எமது அரசாங்கம் செலவிட்டும் வருகின்றது. இத்திட்டத்தினை எமது மாகாணத்திலும் செயற்படுத்தினால் இந்த செலவினங்களை குறைத்துக்கொள்ள முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எமது மாகாணத்தில் இத்திட்டத்தை செயற்படுத்துவதற்கு போதுமான வளங்களும், மிகப் பொருத்தமான இடங்களும் இருக்கின்றது.
அதற்கான முன்னெடுப்புக்களை சிறந்த முறையில் செயற்படுத்த, சிறு பண்னையாளர்கள் மற்றும் தோட்ட செய்கையாளர்களையும் ஊக்குவித்து, மருந்து உற்பத்தி செய்வதற்கான மூலிகைப் பொருட்களை அவர்களிடமிருந்து பெற்றுகொள்ள முடியும் என்றார்.
இக்கலந்துரையாடலில், கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள உயரதிகாரிகள், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஆயுர்வேத வைத்தியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
No comments: