கிழக்கு மாகாண மட்ட கூடைப்பந்தாட்டப் போட்டியில் தமது திறமையை வெளிப்படுத்தி தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரி மாணவர்கள் பாராட்டி கெளரவிப்பு
(அஸ்ஹர் இப்றாஹிம்)
நடைபெற்று முடிவடைந்த கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான கூடைப்பந்தாட்ட போட்டியில் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரி 17 வயதிற்கு உட்பட்ட அணியினரும் 20 வயதிற்கு உட்பட்ட இரண்டு அணியினருமே வெற்றி வாகை சூடி தேசிய மட்ட போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
மாணவர்களுக்கும் பயிறசி வழங்கிய ஆசிரியர்களுக்கும் கல்லூரி அதிபர்,ஆசிரியர்கள்,மாணவர்கள் மற்றும் கல்வி சமூகம் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் கல்லூரியின் 15 வயது, 17 வயது மற்றும் 20 வயதிற்கு உட்பட்ட அணியினருக்கு புதிய சீருடையினை கல்லூரியின் வட அமெரிக்க பழைய மாணவர் சங்கத்தினர்அன்பளிப்புசெய்துள்ளமைகுறிப்பிடத்தக்கவிடயமாகும்.
No comments: