News Just In

7/21/2024 07:42:00 PM

தமிழரசு கட்சியின் எதிர் காலம் என்னவாகும் ?



இலங்கை தமிழரசு கட்சியின் நீதிமன்ற சச்சரவு எதிர் பார்த்தது போன்று முடிவுறவில்லை – இலகுவில் முடிவுறுமா? இந்தக் கேள்வி தொடர்பில் கட்சியினரும் அச்சம் கொண் டிருக்கின்றனர். கட்சிக்கான புதிய தலைவர் தெரிவைத் தொடர்ந்து கட்சிக்குள் மிகவும் தெளிவாகவே இரண்டு அணிகள் உருவாகிவிட்டன.

அது மிகவும் வெளிப்படை யானது. தமிழ் பொது வேட்பாளர் விடயத்தை எதிர்கொள்ளுவதில் பிளவு தெளிவாகவே தெரிந்தது. தற்போதுள்ள சூழலில், பாராளுமன்ற தேர்தலை முன்னர் போன்று கட்சியால் எதிர்கொள்ள முடியுமா என்னும் கேள்வியுமுண்டு. ஒப்பீட்டடிப் படையில் தமிழ் மக்கள் மத்தியில் அதிக செல்வாக்குள்ள கட்சியென்னும் தகுதிநிலையும் முன்னர் போன்றில்லை.

இந்த நிலையில் தனித்து தேர்தலை எதிர்கொண்டால் முன்னர் போல் கட்சியால் வெற்றியை தக்கவைக்க முடி யுமா என்னும் கேள்வியுமுண்டு. தமிழரசு கட்சியின் தற்போதைய நிலைமை ஒரு விட யத்தை தெளிவுபடுத்துகின்றது – அதாவது, தமிழ் தேசிய அரசியல், தனிநபர்களின் பதவி நிலைப் போட்டிகளுக்குள் சிக்கியிருக்கின்றது.


No comments: