ஹார்முஸ் ஜலசந்தியில் அடையாளம் தெரியாத ஏவுகணைகளால் தாக்கப்பட்ட தாய்லாந்து கப்பலில் இருந்து இருபது பணியாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர், ஆனால் மூன்று பணியாளர்களை இன்னும் காணவில்லை என்று தாய்லாந்து போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
20 பேரும் ஒரு லைஃப் படகில் கப்பலை கைவிட்டு ஓமான் கடற்படையால் மீட்கப்பட்டதாக அமைச்சகம் கூறுகிறது. கப்பலின் பின்புறத்தில் ஒரு வெடிப்பு ஏற்பட்டதாகவும், மீதமுள்ள மூன்று பணியாளர்கள் பணிபுரிந்து கொண்டிருந்த இயந்திரப் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் அது மேலும் தெரிவித்துள்ளது.
தாய்லாந்து கொடியுடன் கூடிய சரக்குக் கப்பல் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் சென்றவேளை தாக்கப்பட்டதை அடுத்து, அவசர உதவியை வழங்குவதாக தாய்லாந்து கடற்படை தெரிவித்துள்ளது.
ஒரு அறிக்கையில், றோயல் தாய் கடற்படை 23 தாய்லாந்து பணியாளர்கள் கப்பலில் இருந்ததாகக் கூறுகிறது.
No comments: