
தம்புள்ளை (Dambulla) பொருளாதார மத்திய நிலையத்தில் தேசிக்காய் மற்றும் பச்சை இஞ்சியின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, ஒரு கிலோகிராம் தேசிக்காயின் விலை 1000 ரூபா முதல் 1,200 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக அங்குள்ள வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஒரு கிலோகிராம் பச்சை இஞ்சி தற்போது 3,000 ரூபா முதல் 3,200 ரூபா வரை விற்பனை செய்யப்படுதாக கூறப்படுகின்றது.
எவ்வாறாயினும், தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு அதிகளவு மரக்கறிகள் கையிருப்பில் உள்ள போதிலும் நுகர்வோர் அவற்றை கொள்வனவு செய்யாத நிலை காணப்படுவதாக பொருளாதார நிலையத்தின் வர்த்தகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்
No comments: