News Just In

1/20/2024 11:48:00 AM

கிழக்கு, ஊவா பொலன்னறுவை, மாத்தளையில் அவ்வப்போது மழை - வடக்கிலும் அநுராதபுரத்திலும் சில இடங்களில் மழை





 நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகலில் மழை
– சில இடங்களில் 75 மி.மீ. வரை ஓரளவு பலத்த மழை

இன்றையதினம் (20) இலங்கையின் கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மாவட்டங்களிலும் பல இடங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வட மாகாணம் மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களின் சில இடங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
மேல், சப்ரகமுவ மாகாணங்களின் சில இடங்களில் 75 மி.மீ. இற்கும் அதிக ஓரளவு பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும் சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்

No comments: