யாழில் மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் கொக்குவில் இந்துக்கல்லூரி தெழில்நுட்பப்பிரிவு(2024) கிசோத்மன் எனும் மாணவரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் மாணவரின் மரணம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
மின்னழுத்தியினை மின்பிறப்பாக்கியுடன் இணைக்க முற்பட்ட வேளை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த மாணவனின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் கோப்பாய் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
No comments: