பொலன்னறுவை - கிரித்தலை பிரதேசத்தில் இருந்து காத்தான்குடி பிரதேசத்திற்கு சட்டவிரோதமாக எருமை மாடுகளை கடத்திச் சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை இன்று (06.04.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கைது நடவடிக்கையின் போது 6 எருமை மாடுகள் மற்றும் லொறி ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாவட்ட குற்ற விசாரணப் பிரிவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று அதிகாலை காத்தான்குடி கடற்கரை வீதியில் வைத்து குறித்த லொறி சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: