News Just In

12/19/2022 02:15:00 PM

சாய்ந்தமருது மக்கள் பணிமனை சார்பிலான காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம். பஸ்மீர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் இணைந்தார்



.
(நூருல் ஹுதா உமர்)

சாய்ந்தமருது நகர சபை கோரிக்கையை முன்வைத்து சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலின் தலைமையிலான மக்கள் பணிமனை சார்பில் கடந்த காரைதீவு பிரதேச சபை தேர்தலில் தோடம்பழ சின்னத்தில் போட்டியிட்டு வென்ற சுயேட்சைக்குழு உறுப்பினர் ஏ.ஆர்.முஹம்மட் பஸ்மீர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்து கொண்டார்.

இந்நிகழ்வில் கல்முனை மாநகர பிரதி முதல்வரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய ஒருங்கிணைப்பாளருமான ரஹ்மத் மன்சூர், காரைதீவு பிரதேச பிரதேச சபை உறுப்பினரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாளிகைக்காடு அமைப்பாளருமான எம்.எச்.எம். இஸ்மாயில் உட்பட அக்கட்சியின் பிரதேச முக்கியஸ்தர்களும், பஸ்மீரின் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாளிகைக்காடு பிரதேச அமைப்பாளராக இருந்துவந்த நிலையிலையே அவர் சாய்ந்தமருது நகர சபை கோரிக்கையை முன்வைத்து சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலின் தலைமையிலான மக்கள் பணிமனை சார்பில் கடந்த காரைதீவு பிரதேச சபை தேர்தலில் தோடம்பழ சின்னத்தில் போட்டியிட்டு மாளிகைக்காடு மேற்கு வட்டார மு.கா வேட்பாளர் எம்.எச்.எம். இஸ்மாயிலை தோற்கடித்து வெற்றிபெற்றிருந்தார். சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலின் தலைமையிலான மக்கள் பணிமனையினரின் ஓரவஞ்சக செயற்பாடுகள் காரணமாக அந்த அணியிலிருந்து விலகியிருந்த நிலையிலையே மு.காவில் தன்னை இணைத்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


No comments: