அபு அலா -
திருமலை திருச்சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான நத்தார் பெருவிழா நேற்று மாலை (18) போதகர் கலாநிதி கே.முரளிதரன் தலைமையில் திருமலை வை.எம்.சி.ஏ மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது சபையோரின் பாடல், வாசிப்பு, குழு நடனம், அபிநயப் பாடல், ஜெபம், பாலன் பிறப்பு, நாடகம் போன்றவை இடம்பெற்றதுடன் இறுதியில் போதகரினால் தேவ செய்தி வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
No comments: