News Just In

9/06/2022 09:08:00 PM

காரைதீவு பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் !




நூருல் ஹுதா உமர், எம்.என்.எம். அப்ராஸ்

பொலிஸ் திணைக்களத்தின் 156 வது பொலிஸ் தின நிகழ்வை சிறப்பிக்குமுகமாக காரைதீவு பொலிஸ் நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாம் இன்று (06) காலை காரைதீவு பொலிஸ் நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது.

காரைதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஆர்.எஸ். ஜெகத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்தவங்கி அதிகாரிகள் கலந்துகொண்டு இரத்த தான நிகழ்வை முன்னெடுத்தனர். இதன்போது பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு இரத்தம் பெறப்பட்டது. பொலிஸார், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், இளைஞர்கள் எனப்பலரும் கலந்துகொண்டு இரத்தம் வழங்கி வைத்தனர்.






No comments: