News Just In

9/11/2022 06:02:00 PM

கண்டியில் பாரிய சோகத்தை ஏற்படுத்திய யுவதியின் உயிரிழப்பு!

கண்டியில் உள்ள பகுதி ஒன்றில் இடம்பெற்ற வாகன விபத்தில் யுவதி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து சம்பவம் கண்டி முல்கம்பல பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த வேன் ஒன்று வீதியை விட்டு விலகி பாதசாரிகள் மூவர் மீதும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீதும் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் மூன்று பாதசாரிகள், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் வேனில் பயணித்த பெண் ஒருவருமாக 5 பேர் காயமடைந்து கண்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், படுகாயமடைந்த பாதசாரி பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

No comments: