News Just In

9/11/2022 05:59:00 PM

12 மணிநேரமாக அதிகரிக்கப்போகும் மின்வெட்டு..! வெளியாகிய அறிவித்தல்!

ஒக்டோபர் 20ஆம் திகதிக்கு முன்னர் அனல் மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரி நாட்டிற்கு கிடைக்கவில்லை எனின் 10 தொடக்கம் 12 மணித்தியால மின் துண்டிப்பை முன்னெடுக்க நேரிடும் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் இந்துனுவர தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

கூடிய விரைவில் அனல் மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரிகளை கொண்டு வருமாறு கூறினோம்.

தற்போது இருப்பில் காணப்படும் நிலக்கரி தொகையானது எதிர்வரும் ஒக்டோபர் 20 - 25ஆம் திகதி வரையிலேயே போதுமானது. அதன் பின்னர் மின் உற்பத்தியை முன்னெடுப்பதற்கு கட்டாயமாக நிலக்கரிகள் கொண்டுவரப்பட வேண்டும்.

எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மழைவீழ்ச்சி குறைவடைதல் போன்ற சிக்கல்கள் ஏற்பட்டால் மின் துண்டிப்பு நேரமானது 10 அல்லது 12 மணித்தியாலங்களுக்கு நீடிக்கக் கூடும் என ரஞ்சித் இந்துனுவர சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments: