எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதேவேளை, 35 ஆயிரம் மெற்றிக் தொன் பெற்றோளை ஏற்றிய மற்றுமொரு கப்பல் இலங்கையை வந்தடையுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்ததுடன் ,இதனை இறக்கும் பணிகள் இன்று இடம்பெறும் என்றும் தெரிவித்தார்.
கப்பலுக்கான கொடுப்பனவு நேற்று முன்தினம் மத்திய வங்கி ஊடாக செலுத்தப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.
No comments: