News Just In

5/26/2022 06:40:00 AM

புடினுடன் நேருக்கு நேர் பேச நான் தயார்...உக்ரைன் அதிபர் அதிரடி அறிவிப்பு!

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா அதிபர் புடினை நேரில் சந்தித்து பேச தான் தயாராக உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

டாவோஸில் நடைப்பெற்ற உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்துக் கொண்டு பேசிய ஜெலன்ஸ்கி கூறியதாவது,

போர் நிறுத்தம் தொடர்பில் பிரதிநிதிகளுடன் நடந்த பேச்சு வார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாததால் அவர்களுடன் இனி பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை என கூறினார்.

மேலும் ரஷ்ய அதிபர் புடின் உண்மை நிலவரத்தைப் புரிந்துக் கொண்டால் போர் நிறுத்ததுக்கான வாய்ப்பு உள்ளதாகவும், ரஷ்யா ஆக்கிரமிதுள்ள மீட்கும் வரையில் உக்ரைன் தொடர்ந்து போராடும் என்றும் அவர் தெரிவித்தார்.

No comments: