News Just In

4/20/2022 01:06:00 PM

சம்மாந்துறை அல்-உஸ்வா வளாகத்தில் 4000 கிலோ மஞ்சள் மஞ்சள் அறுவடை

நூருல் ஹுதா உமர், ஐ.எல்.எம் நாஸிம்

சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள புளேக் ஜே மேற்கு 3 கிராம சேவையாளர் பிரிவில் அமைந்துள்ள சம்மாந்துறை அல்-உஸ்வா பிலாண்டேசன் வளாகத்தில் வளாக உரிமையாளர் இஸ்லாலெப்பை முஹம்மது முஸ்தபா மெளலவி தலைமையில் மஞ்சள் செய்கை அறுவடை இன்று (20) இடம் பெற்றது.

அல்-உஸ்வா பிலாண்டேசன் வாளாகத்தில் மொத்தமாக எட்டு பாத்திகளில் பயிர் செய்கை செய்யப்பட்டிருந்தது. அதில் 4000 கிலோ மஞ்சள் அறுவடையின் போது கிடைக்கப்பெற்றது. இந்த அறுவடை நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முகம்மது ஹனிபா தலைமையிலான குழுவினர் , சம்மாந்துறை விவசாய விரிவாக்கல் நிலைய பொறுப்பதிகாரி எம்.ரீ. எம் . நளீர், சம்மாந்துறை பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் ஜனோசன் விஜயவர்த்தன என பலர் கலந்து கொண்டனர்.


No comments: