விற்பனை நிலையம் நேற்று மாலை மூடப்பட்டதன் பின்னர் தீப்பரவல் ஏற்பட்டதை தொடர்ந்து வவுணதீவு பொலிஸாரும் மட்டக்களப்பு மாநகரசபையின் தீயணைப்பு பிரிவும் இணைந்து தீயை கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்துள்ளனர்.
இதன்போது குறித்த வர்த்தக நிலையத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பொருட்கள் மற்றும் வர்த்தக நிலையத்திலிருந்த இலத்திரனியல் பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் தீப்பரவல் சம்பவமானது மின் ஒழுக்கா அல்லது வேறு காரணங்கள் ஏதுவும் உள்ளதா என்பது தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த தீ காரணமாக குறித்த வர்த்தக நிலையத்திற்கு சுமார் 20 இலட்சம் ரூபாவுக்கு மேல் நஸ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தற்போதைய பொருளாதார நெருக்கடியான நிலையில் மக்களுக்கு மிகவும் விலை குறைந்த நிலையிலேயே பொருட்களை வழங்கிவந்ததாக ஈச்சந்தீவு-கன்னங்குடா பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் நாகலிங்கம் உருத்திரமூர்த்தி தெரிவித்துள்ளார்.


No comments: