News Just In

3/16/2022 08:37:00 PM

எதிர்வரும் வாரங்களில் அரிசியின் விலை அதிகரிக்கும் அபாயம்!

எதிர்வரும் வாரங்களில் ஒரு கிலோ அரிசியின் விலை 200 ரூபாவை தாண்டும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அரசாங்கம் மீண்டும் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை அமுல்படுத்தாவிட்டால் இந்த நிலை ஏற்படும் என சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

பாரிய நெல் ஆலை உரிமையாளர்களுக்கு நன்மை ஏற்படும் வகையில் அரசாங்கம் செயற்படுவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

அதற்கமைய அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை அரசாங்கம் உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் கோருகின்றது.

இதேவேளை, அரிசி பொதி செய்ய பயன்படுத்தப்படும் அரிசி மூடை உற்பத்தியாளர்கள் விலையை 35 ரூபாயினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதுடன், அதற்கேற்ப அரிசியின் விலையும் அதிகரிக்கப்படும் என குறிப்பிடப்படுகின்றது.

அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரிப்புடன் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலையை விதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அரிசி இறக்குமதியாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

No comments: