News Just In

3/16/2022 08:17:00 PM

தியாகராஜா அறக்கட்டளை நடாத்தும் 'நினைவுகளைப் பேசுவோம்'!

வடக்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மட்டக்களப்பு மாநகர முதல்வர் மற்றும் சிவானந்தா தேசிய பாடசாலையின் அதிபர் போன்ற பல்வேறு பதவிகளை வகித்த காலஞ்சென்ற கந்தையா தியாகராஜா அவர்களின் நினைவு மலர் வெளியீடும் அவரது நினைவுகளை பேசும் நிகழ்வும் எதிர்வரும் 20.03.2022 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு மட்டக்களப்பு மாநகர மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

பேராசிரியர் சி.மௌனகுரு அவர்களின் தலைமையில் நடைபெறும் மேற்படி நிகழ்வுக்கு கலாபூசணம் கவிஞர் ச.அருளானந்தம் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார்.

தியாகராஜம் நினைவுமலர் நூல் மதிப்புரையை பேராசிரியர் செ.யோகராஜா வழங்கவுள்ளார். சிறப்பு அதிதியாக வடக்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக பணிபுரிந்த கலாநிதி E.J. சற்குணராஜா அவர்களுடன் கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அரச அதிபர் திரு.ச.புண்ணியமூர்த்தி, மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் கல்விப்பணிப்பாளர் திரு.S.S. மனோகரன், வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் கலாச்சார பணிப்பாளர் கலாபூசணம் செ.எதிர்மன்னசிங்கம், திரு.O.குலேந்திரன், திரு.கே.பாஸ்கரன் மற்றும் திரு.S.சுந்தரலிங்கம் அவர்களும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.

No comments: