News Just In

3/16/2022 02:54:00 PM

மட்டக்களப்பு மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுப்பு!


கொவிட் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளாத மாணவர்களை இனங்கண்டு அவர்களுக்கான தடுப்பூசிகளை செலுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகம் ஊடாகவும் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மாணவர்களை கொரனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பாடசாலைகளில் கொவிட் தடுப்பூசிகளைப்பெற்றுக்கொள்ளாத மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் இன்றைய தினம் கொரனா தடுப்பூசியைப்பெற்றுக்கொள்ளாத மாணவர்களுக்காக தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.இன்றைய தினம் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாத மாணவர்கள் ஆர்வத்துடன் தடுப்பூசியை பெற்றுக்கொண்டதை காணமுடிந்தது.

No comments: