News Just In

1/10/2022 06:50:00 AM

கல்கிசை - காங்கேசன்துறைக்கு இடையில் புதிய குளிரூட்டப்பட்ட தொடருந்து சேவை!

கல்கிசைக்கும், காங்கேசன்துறைக்கும் இடையிலான நகர்சேர் கடுகதி சேவையில், புதிய குளிரூட்டப்பட்ட தொடருந்து ஒன்று நேற்று(09) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் குறித்த தொடருந்து நேற்று முதல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

8 பெட்டிகளுடன் சேவையில் ஈடுபடுத்தப்படும் இந்த தொடருந்தில், 360 பயணிகள் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று அதிகாலை 5.10 மணிக்கு கல்கிசையில் இருந்து காங்கேசன்துறையை நோக்கி முதலாவது பயணத்தைக் குறித்த தொடருந்து ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: