News Just In

9/15/2021 11:59:00 AM

​மட்டக்களப்பு மாநகரா சபையினால் சடலங்களை எரிப்பதற்கான தகனசாலை அமைப்பதற்கான கேள்வி கோரப்பட்டுள்ளது...!!


மட்டக்களப்பு மாவட்டத்திற்கு தற்போதைய சூழ்நிலையில் அவசிய தேவையாக உள்ள தகனசாலையை அமைப்பதற்கான அனுமதி  மட்டக்களப்பு மாநகர சபையினால் வழங்கப்பட்டதனை அடுத்து சரியான பொறிமுறையின் கீழ் குறித்த வேலைக்கான கேள்வி இன்று மும்மொழிகளில் பத்திரிக்கையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.


மேற்படி வேலைக்கான ஆயத்தங்கள் மற்றும் வேலைகள் தொடர்பாக மாநகரசபை பொறியியலாளர் மற்றும் வேலைப்பிரிவுக்கு உரிய அறிவுறுத்தல்கள் சபையினால் வழங்கப்பட்டுள்ளதுடன் குறித்த வேலையினை துரிதப்படுத்தும் வண்ணம் ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளது.


மட்டக்களப்பு மாநகரசபையின் எல்லைக்குள்  சடலங்களை எரிப்பதற்கான தகனசாலையை நிர்மாணிப்பதற்காக மட்டக்களப்பு சார்பாக தகுதிவாய்ந்த ஒப்பந்தகாரர்களிடமிருந்து சடலங்களை எரிக்கும் இடத்தினை நிர்மாணிப்பதற்கான கேள்வி அறிவித்தல் கோரப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.




No comments: