News Just In

8/24/2021 08:24:00 AM

மூதூரில் கொரோனா பரவலைக் கட்டுபடுத்தல் தொடர்பான கலந்துரையாடல்...!!


(எப்.முபாரக்)
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கொரோனா பரவுதலை கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் மூதூர் பிரதேச செயலாளர் எம்.பி.எம்.முபாரக் தலைமையில் மூதூர் பிரதேச கேட்போர் கூடத்தில் நேற்று(23) இடம்பெற்றது.

இதன் போது கொரோனா பரவலை கட்டுப்படுத்தலுக்கான துரித நடவடிக்கைகள் தொடர்பாகவும் மூதூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நிலவுகின்ற வாகன பிரச்சினையை தற்காலிகமாக நிவர்த்திக்கும் வகையில் வாகன ஏற்பாடும் செய்யப்பட்டதோடு,மூதூர் பிரதேச மக்களின் பாதுகாப்பு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இக்கலந்துரையாடல் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவான் அத்துகொரல திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகொரல, பாராளுமன்ற உறுப்பினரின் மூதூருக்கான இணைப்பாளர் எம்.ஏ.எம். முபாரக் ஆகியோருடன் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம்.காஸ்ஸாலி, பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டார்கள்.




No comments: