News Just In

8/24/2021 08:33:00 AM

ஓட்டமாவடி– மஜ்மா நகரில் நல்லடக்கம் செய்யப்பட்ட உடல்கள் 2000 ஐ தாண்டியது...!!


(எச்.எம்.எம்.பர்ஸான்)
கொரோனாத் தொற்றினால் மரணமடைந்தவர்களை அடக்கம் செய்யும் ஓட்டமாவடி – மஜ்மா நகர் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்ட உடல்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தைத் தாண்டியுள்ளதாக அப்பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.நௌபர் தெரிவித்தார்.

நேற்றைய தினம் (22) அடக்கம் செய்யப்பட்ட 48 உடல்களுடன் இதுவரை மொத்தமாக 2018 உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும்இ தற்போது நாளொன்றுக்கு 30 தொடக்கம் 50 வரையான சடலங்கள் நல்லடக்கத்துக்கு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த 20 ஆம் திகதி மாத்திரம் 53 உடல்கள் அங்கு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும்இ இதுவே ஒரே நாளில் அதிகூடிய உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட நாளாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: